Home » » உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இம்மாதம் முதல் வட்டியில்லா கடன்

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இம்மாதம் முதல் வட்டியில்லா கடன்

2018 ஆம் ஆண்டில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்தி அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மாணவர் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கடன் திட்டத்தின் கீழ் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கடனைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்படும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |