Home » » உக்ரேனிய விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் பகீரங்க எச்சரிக்கை!

உக்ரேனிய விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் பகீரங்க எச்சரிக்கை!

ஈரான் ஐ.ஆர்.ஜி.சி படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய குடும்பங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு பேட்டியளித்தால் இறந்தவர்களின் உடலை திரும்பப்பெற முடியாது எனவும், ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த, பாரசீக மொழி ஊடகங்களுக்கு பேட்டி வழங்கக்கூடாது என்று ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என லண்டனிலுள்ள பாரசீக மொழித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரேடியோ பர்த்தா பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்களுடனான தொலைக்காட்சி நேர்காணலை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரான் இவ்வாறு பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.


விமானம் விபத்துக்குள்ளாதனதற்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என கூறி வந்த ஈரான் நேற்று விமானத்தை சுட்டு விழுத்தியது தாம் தான் என்று ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஈரான் இவ்வாறு பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளமை அனைவரிடத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |