கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக கல்முனைப் பிராந்திய தொற்றுநோய் பிரிவு பொறுப்பதிகாரி நாகூர் ஆரிப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்மாதம் மட்டும் 780 பேருக்கு மேல் டெங்கு தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், குறிப்பாக அக்கரைப்பற்று, பொத்துவில், அட்டாளைச்சேனை போன்ற பிரிவுகளில் டெங்கு நோய்த்தாக்கம் கூடுதலாக இருக்கிறது.
ஆனால் இதுவரை தெய்வாதீனமாக யாரும் உயிரிழக்கவில்லை. மழைக்கு பின்னரான காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதைவிட காசநோய் தாக்கமும், தொழுநோய் தாக்கமும் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், குறிப்பாக அக்கரைப்பற்று, பொத்துவில், அட்டாளைச்சேனை போன்ற பிரிவுகளில் டெங்கு நோய்த்தாக்கம் கூடுதலாக இருக்கிறது.
ஆனால் இதுவரை தெய்வாதீனமாக யாரும் உயிரிழக்கவில்லை. மழைக்கு பின்னரான காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதைவிட காசநோய் தாக்கமும், தொழுநோய் தாக்கமும் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments: