இலங்கை இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நாடு பூராகவும் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களையும் தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இன்றையதினம் குறித்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
24 படைப்பிரிவின் கல்முனை பிராந்திய விஜயபாகு படைப்பிரிவினர் இன்று காலை 7.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரையான கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் கடற்கரை பிரதேசத்தினை தூய்மைப்படுத்தி மக்கள் பாவனைக்கு கொடுப்பதற்கான நடவடிக்கையாக இந்த தூய்மைப்படுத்தும் திட்டம் அமைந்திருந்தது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 Comments