Home » » வடக்கு ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி சறோஜினிதேவி சார்ள்ஸ்

வடக்கு ஆளுநராக நிர்வாக சேவை அதிகாரி சறோஜினிதேவி சார்ள்ஸ்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான சறோஜினிதேவி  சார்ள்ஸை நியமிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முடிவுக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வரும் சில தினங்களில் வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில், சறோஜினிதேவி சார்ள்ஸ் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாணம் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது.

இந்நிலையில் சறோஜினிதேவியை  ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராகவும். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், கடைசியாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராகவும்,  சறோஜினிதேவி நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  கிழக்கின் புதிய ஆளுநர் அனுராதா ஆடை வடிவமைப்பாளரும் ஏற்றுமதித் துறையின் பிரபல தொழிலதிபருமாவார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் டுநநனள பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற இவர் தனது பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததன் பின் தனது தாயார் சீதா யகம்பத்திற்கு சொந்தமான கண்டிக்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.

2018ஆம் ஆண்டில் இவர் ஏற்றுமதித் துறைக்கு வழங்கிய முக்கிய பங்களிப்புக் காரணமாக இலங்கை அபிவிருத்திச் சபையினால்; பாராட்டப்பட்டதுடன், மிகச் சிறந்த புத்தாக்க ஏற்றுமதியாளர் எனும் சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |