விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதென்று சம்பந்தன் கருதுவாரானால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த பத்து வருடத்தில் அவர் எதனைச் சாதித்தார்? என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இரா.சம்பந்தனின்உரை தொடர்பில் சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தாம் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தத் தயாரா? கேள்வியெழுப்பியுள்ளார்.
இப்பொழுது மீண்டும் ஒருமுறை முழுமையான ஆணை வேண்டுமெனக் கேட்கிறார். ஒரு பகுதி கூட யாருக்கும் போய்விடக்கூடாது என்றும் கூறுகிறார். இத்தகைய புதிய ஆணையினூடாக எதனையாவது சாதிப்பதற்கான திட்டங்களோ, வழிகாட்டல்களோ, அதற்கான வியூகங்களோ உங்களிடம் இருக்கின்றதா?
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம்' என்ற ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதென்று சம்பந்தன் கருதுவாரானால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த பத்து வருடத்தில் அவர் எதனைச் சாதித்தார்?. என கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments: