Home » » மட்டக்களப்பில் மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் இன்று பகல் இராட்சத சுறா மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பாலமீன் பகுதியில் கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் இந்த சுறா சிக்கியுள்ளது.
சுமார் 400கிலோவுக்கு மேல் எடைகொண்டதாக இந்த இராட்சத சுறா காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலையிலும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த சுறாமீன் பிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |