Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தொடரும் கடும் மழை! நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு


நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததால் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தியவன்ன ஓயாவின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், தொடர்ந்தும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments