
நீதிமன்ற அவமதிப்க்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் சிவில் அமைப்புகளால் போராட்டங்கள் நடத்தப்ட்டு வருகிறது. திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் வெள்ளிக்கிழமை 2019.09.27 காலை 10.00 மணிக்கு கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெருமளவிலான சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு விதமான பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
10.45 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் போராட்ட களத்திற்கு வந்து அவர்களின் பிரச்சிகைளைக் கேட்டறிந்தார். உரிய அதிகாரிகளுடன் தொடர் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழா வண்ணம் இருக்க எல்லோரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 Comments