Home » » இவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு

இவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வார இறுதியில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் , சஜித் பிரேமதாசவுக்கு விரும்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் இதனடிப்படையில் மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதன் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
கடந்த வாரம் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவியிருந்தன.
இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக் கிழமை “சஜித் வருகிறார்” என்ற தலைப்பிலான இரண்டாவது பொதுக் கூட்டம் மாத்தறையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் மங்கள சமரவீர இந்த பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்சவை திருட்டு வழியில் பிரதமராக நியமித்த போல், மீண்டும் அப்படியான சதித்திட்டத்தை மேற்கொள்ள இரவு நேரங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்திருந்தர்.
கொழும்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியிருந்தார்.
தவறியேனும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியின் சதித்திட்டத்தில் சிக்கினால், அத்துடன் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் எனவும் அவர் குறிப்பிட்டடிருந்தார்.
இந்த செய்திகளால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |