Home » » துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது

துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது




பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் சீ.மூ இராசமாணிக்கம் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உணர்வாளர்கள் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் மற்றும் அவுஸ்ரேலியா நாட்டில் வசிக்கும் நன்கொடையாளர்கள்) ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மேலும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கி வைத்து நன்கொடையாளர் சிவா நாங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சொந்த நாட்டின் மீதும் எம் மக்கள் மீதும் பற்றோடும் பரிவோடும் இருக்கிறோம், எமது மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் அதற்க்கா முதற்கட்ட உதவியே இது ,தொடர்ந்து வரும் காலத்தில் இன்னும் பல உதவிகளை வழங்கவுள்ளோம் மாணவர்களே அதற்க்காக உங்களது கைமாறு நீங்கள் நல்ல பெறுபேறுகளை பெற வேண்டும் உயர்தொழில்களை வகிக்க வேண்டும் என ஆசி வழங்கி உரையாற்றினார்.

தொடர்ந்தூ இரா. சாணக்கியன் துறைநீலாவணை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் முடிந்த உதவித்திட்டங்களையும் வழங்கி வருகிறேன், தொடர்ந்து வாழ்வாதார உதவித்திட்டங்களையும் வழங்குவதற்க்கான ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளேன் விரைவில் அது நடைபெறும் அதே போன்று புலம்பெயர்ந்து வாழும் தனவந்தர்களும் தம்மாலான நலத்திட்டங்களை வழங்க முன் வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |