Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெளிநாடொன்றில் போராடித் தோற்ற சிறிலங்கா பெண்கள்!

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் நேற்றுக் கலந்துகொண்ட சிறிலங்கா வலைப்பந்தாட்ட அணி போராடித் தோற்றது.
இதன்படி உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்ரீலங்கா அணி கலந்துகொண்ட இரண்டாவது போட்டியும் தேல்வி அடைந்துள்ளது.
இந்த போட்டி இங்கிலாந்தில் லிவர்புலில் நடைபெற்றதுடன் வட அயர்லாந்து அணியை எதிர்கொண்ட சிறிலங்கா அணி 67:50 என்ற புள்ளி அடிப்படையில் தோல்வி அடைந்தது.
இரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதலாவது சுற்றில் வட அயர்லாந்து அணி 18:13 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கண்டது. இரண்டாவது சுற்றில் 16:12 என்ற ரீதியிலும் மூன்றாவது சுற்றில் 17:12 என்ற புள்ளி அடிப்படையிலுல் வட அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
4 ஆவது சுற்றில் இலங்கை அணி கடுமையாக போராடியபோதிலும் இறுதியில் 16:13 என்ற புள்ளி அடிப்படையில் வட அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments