கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற தயாகமகே மற்றும் அமைச்சர் மனோகணேசன் இருவரும் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும் கதைக்கவில்லை என்பதே உண்மை என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அங்கு பேசிய அவர்,
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற தயாகமகே இதுவரை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஒருநாள் கூட நாடாளுமன்றத்திலே அவர் குரலை எழுப்பியதில்லை.
அதேபோல் நாடாளுமன்றதில் எந்த ஒரு இடத்திலும், வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயம் தொடர்பில் இதுவரையிலே அமைச்சர் மனோகணேசனும் எந்த குரலையும் எழுப்பியதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற எந்த உறுப்பினர்களும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்த சரித்திரமில்லை என்பது தான் எனது கருத்து என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அங்கு பேசிய அவர்,
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற தயாகமகே இதுவரை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஒருநாள் கூட நாடாளுமன்றத்திலே அவர் குரலை எழுப்பியதில்லை.
அதேபோல் நாடாளுமன்றதில் எந்த ஒரு இடத்திலும், வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயம் தொடர்பில் இதுவரையிலே அமைச்சர் மனோகணேசனும் எந்த குரலையும் எழுப்பியதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற எந்த உறுப்பினர்களும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்த சரித்திரமில்லை என்பது தான் எனது கருத்து என கூறியுள்ளார்.
0 comments: