Home » » தான் செய்த குற்றச்செயல்களை விசாரணைகளில் கக்கும் மாகந்துரே மதூஸ்!

தான் செய்த குற்றச்செயல்களை விசாரணைகளில் கக்கும் மாகந்துரே மதூஸ்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் தான் செய்த குற்றச் செயல்கள் குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பாதாள உலககுழு உறுப்பினரான சமயங் என்பவர் பயணித்த சிறைச்சாலை பஸ்ஸின் மீது களுத்துறை எதனமடல பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவை வழிநடாத்தியது தான் தான் என மதூஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ உட்பட பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது பிலியந்தலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையும் வழிநடாத்தியது மதூஸ் எனவும் தெரியவந்துள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |