Home » » சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல சமூக சேவை பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது.

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல சமூக சேவை பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது.

( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது  பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல சமூக சேவை பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது.
சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் இன்று( 31) இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடிநீர் இணைப்பை பெற்றுக் கொள்ள  முடியாத இரு குடும்பங்களுக்கு அதற்கான பணத்தை கழகத்தின் நிர்வாக சபை உறுப்பின் ஒருவரால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கி குடிநீர் இணைப்பை பெறுவதற்கான பற்றுச் சீட்டுக்களை குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |