Home » » அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. பதற்றத்தில் மக்கள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. பதற்றத்தில் மக்கள்

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசு கட்டடம் ஒன்றில் பாரபட்சம் இன்றி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் அந்நாட்டு பொலிஸ் அதிகாரி எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 11 பேரின் அடையாளங்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அப்பகுதியில் ஏரளாமான பொலிஸார் குவிக்கப்பட்டு, பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |