Home » » ஹிஸ்புல்லாஹ்வுக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு? உடன் விசாரிக்கப்பட வேண்டும்

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு? உடன் விசாரிக்கப்பட வேண்டும்

தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் முக்கியமாக காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் ஹிஸ்புல்லா அதி முக்கியமானவர். முன்னைய நாட்களில் முஸ்லிம் தீவிரவாத கருத்துக்களை வெளிப்படையாகவே ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார் என என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே தீவிரவாத குழுக்கள் காத்தான்குடியில் உருவாவதற்கும் அவருக்கும் நிச்சயமாக சம்பந்தம் உள்ளது. அந்த பின்னணி ஆராயப்படவேண்டும். விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னதாக காத்தான்குடியை மையமாக கொண்டு வன்முறையை உபயோகிப்பதற்கென்று பலர் ஏற்கனவே தயார் படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கின்றது.
இது நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் செயற்பாடு, இந்த காலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை பலர் பணம் கொடுத்து வளர்த்திருக்கின்றார்கள். விசேடமாக அவர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசும்போது சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தேன், இந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிற்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |