கொழும்பில் உள்ள கேட்டரமா கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே உள்ள பல கிணறுகளில் வாள் உட்பட பல ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று முந்தினம் மாளிகாவத்த பகுதியில் கிணறு ஒன்றினுள் இருந்து வாள்கள் ஆயுதங்கள் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. அதே கிணற்றிற்கு அருகில் இருந்த கிணறுகளிலேயே நேற்றைய தினமும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் படி, 2 வாள்கள், 28 கத்திகள், 198 துப்பாக்கி ரவைகள் மற்றும் உருமறைப்பு ஆடைகள் என்பன அந்த பகுதியில்ருந்த 3 கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
0 comments: