Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேசிய பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் 9 சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments