Home » » கதிர்காம பாதயாத்திரைப் பயணம் ஆரம்பம்

கதிர்காம பாதயாத்திரைப் பயணம் ஆரம்பம்


மு.கோகிலன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ் நிலையினையும் பொருட்படுத்தாது கதிர்காம யாத்திரிகள் பலர் தமது நேத்திக் கடனை செலுத்தும் முகமாக கதிர்காமம் நோக்கி கால்நடையாக பாத யாத்திரை செல்லும் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று புதன் இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தரித்து நின்ற யாத்திரை குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை (23) தமது யாத்திரை பயணத்தினை மீண்டும் தொடர்ந்தனர்.

குறித்த யாத்திரை குழுவானது வேல்சாமி துரைச்சாமி தலைமையில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி முருகன் ஆலயத்தில் இருந்து 16.5.2019 ஆம் திகதி தங்களது யாத்திரையினை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் 01.07.2019 ஆம் திகதி கதிர்காமத்தினை சென்றடையவுள்ளதாக குழுவின் தலைவர் வேல்சாமி துரைசாமி தெரிவித்தார்.
எதிர்வரும் 2.7.2019 ஆம் திகதி கதிர்காம ஆலயத்தின் கொடியேற்றம் ஆரம்பித்து 16.7.2019 ஆம் திகதி ஆடிப் பூரணை தினமன்று தீர்தோற்சவத்துடன் ஆலய பூசை நிகழ்வுகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









கதிா்காம பாதயாத்திரை பயணம் ஆரம்பம்

Rating: 4.5
Diposkan Oleh:
Team New
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |