Home » » இந்த முறை உலகக்கோப்பை கண்டிப்பா இவங்களுக்கு தான் : கவாஸ்கர்!

இந்த முறை உலகக்கோப்பை கண்டிப்பா இவங்களுக்கு தான் : கவாஸ்கர்!



புதுடெல்லி: இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு அதிகளவில் உள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் கணித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. இதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

10 அணிகள்.... 
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

யாருக்கு வாய்ப்பு: 
இந்நிலையில் இந்தாண்டு நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் நடப்பதால், இங்கிலாந்து அணி சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘கடந்த இரண்டு முறை (2011- இந்தியா, 2015 - ஆஸ்திரேலியா) நிகழ்ந்தது போல இம்முறை இங்கிலாந்து அணிக்கு சாதகம் அதிகளவில் உள்ளது. தவிர, இங்கிலாந்து அணி வீரர்கள் தற்போது சூப்பர் பார்மில் உள்ளனர்.

கடும் சவால்: 
இந்திய அணியை பொறுத்தரையில் இத்தொடரில் கடும் சவாலான அணியாக இருக்கும். அதேபோல ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளும் சாதிக்க வாய்ப்பு உள்ளது.’ என்றார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |