இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் உள்ளிட்ட 38 பேர் பயிற்சி பெற்ற முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
அம்பாறை - சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து, இன்று மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சஹாரான் உட்பட 38 பேர் வரையில் டி 56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, கடந்த 21ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னதாக, 17ஆம் திகதி தாக்குதலுக்கான இறுதி பயிற்சியை இந்த கட்டடத்திலே மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குருகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடம் குத்தகைக்கு பெற்றுள்னர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக தகவலகள் - திருமாள்
அம்பாறை - சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து, இன்று மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சஹாரான் உட்பட 38 பேர் வரையில் டி 56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, கடந்த 21ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னதாக, 17ஆம் திகதி தாக்குதலுக்கான இறுதி பயிற்சியை இந்த கட்டடத்திலே மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குருகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடம் குத்தகைக்கு பெற்றுள்னர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக தகவலகள் - திருமாள்
0 comments: