Home » » வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவு!

வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவு!


மறைமுக வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கி மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
வட்வரி மற்றும் மறைமுக வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலமாக பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதே முக்கிய குறிக்கோளாக அமைந்திருக்கிறது.
நேரடியான வரியில் கூடுதலான தொகையை வசூலிக்க முடியுமாயின் பொதுமக்கள் மீதான வரி சுமையை குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வட்வரி சதவீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த வட்வரியை குறைப்பதாயின் அரசாங்கத்துக்கு நிதி அவசியம்.
அரசாங்கமும் திணைக்களமும் இதனை எதிர்பார்கின்றது. மறைமுக வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கி மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |