நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தடைப்பட்டிருந்த பாடசாலைகளின் 2 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஒன்றுகூடல் கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிபர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.
அனைத்துப் பாடசாலைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்பே, மாணவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் இராணுவ உயரதிகாரிகள், பொலிஸார், பாடசாலைகளின் அதிபர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments: