பதுளை-பொகம்பர பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேகத்திற்கிடமான குறித்த வீடு தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் ஒவ்வொரு அறைகளிலும் சென்று சோதனை மேற்கொண்டனர். அதன் போது ஒர் அறையினுள் நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து அந்த பகுதியை கட்டில் வைத்து மறைத்து வைத்திருந்தனர்.
இந்த சுரங்கத்திற்குள் வசதியாக பதுங்கியிருந்த 3மூன்று பயங்கரவாதிகள் உட்பட 5பேரை இன்று மதியம் 2 மணியளவில் இராணுவத்தினர் கைது செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்ட நபர்களாவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments: