Home » » பாடசாலை மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி


மத்திய மாகாணம் - திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மாணவர்களுக்கு கை மற்றும் முதுகு பகுதிகளில் அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7இல் ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் 21 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வகுப்பறை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறையில் தெள்ளு, பூச்சிகள் இம்மாணவர்களை தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும் அங்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை என கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுவதோடு, மாணவர்களை விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |