Home » » 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் பரீட்சை

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் பரீட்சை


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடவத்தை பகுதியில் பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

”நான் செல்லும் எல்லா பாடசாலைகளிலும் 5ஆம் தர புலமைப் பரிசியில் பரீட்சையில் மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக கூறுகின்றேன். சிலர் இதனை தவறாக புரிந்துக்கொண்டுள்ளனர். 5ஆம் தரத்தில் புலமைப் பரிசில் பரீட்டையை இல்லாது செய்து 8ஆம் தரத்தில் பரீட்சையொன்றை நடத்தவுள்ளோம். அந்த மாணவர்களின் திறமைகளை அறிந்து குறிப்பிட்ட விடயத்துறையில் அந்த பிள்ளையை தெரிவு செய்யும் வகையிலேயே அந்த பரீட்சை மாற்றியமைக்கவுள்ளது. எவ்வாறாயினும் இன்னும் 2 வருடங்களின் பின்னரே புலமைப் பரிசில் பரீட்சை இல்லாது செய்யப்படும். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |