Home » » 10 உயிர்களை பலியெடுத்த விபத்து

10 உயிர்களை பலியெடுத்த விபத்து


மகியங்கனை – பதுளை வீதியில் இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் வானொன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வானில் பயணித்தவர்களே இவ்வாறாக உயிரிழந்துள்ளதாகவும் இவர்களிடையே 3 சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது வானில் 12 பேர் இருந்துள்ளதுடன் அதில் 2 பேர் மாத்திரம் படுகாயத்துடன் தப்பியுள்ளனர்.

பஸ்ஸுடன் மோதிய வான் பஸ்ஸின் முன்பக்கத்திற்குள்ளேயே சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)IMG_20190417_051056 - Copy
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |