Home » » நாடு பூராகவும் கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாடு பூராகவும் கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


நாடு பூராகவும்  கடைகளில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சகல வகையான பல் மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பால் மா நிறுவனங்கள் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெருந்தொகை பால் மா துறைமுகத்திலிருந்து வெளியே எடுக்கப்படாது இருக்கும் நிலையிலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இறக்குமதி பால் வகை மாத்திரமன்றி உள்நாட்டு உற்பத்தி பால் மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பால் மா தட்டுப்பாட்டுக்கு பின்னால் பால் மா மாபியாக்கள் எனப்படும் குழுக்களின் திட்டமிட்ட சதிகள் இருப்பதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்நிலையில் பால் மா விலை தொடர்பாக புதிய விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |