அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளியால் குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன.
இதுபற்றி தகவலறிந்து 20க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூறாவளியானது ஜோர்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 23 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். சிலரை காணவில்லை. இந்த எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
0 Comments