( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர கணித , விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த அந்த குழு மாணவர்களுக்கான இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று ( 3 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பொது வைத்தியம் , கண் பரிசோதனை , ஈ.சீ.ஜீ. பரிசோதனை , இரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இக்குழுவில் கல்வி கற்ற உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் , இப்பிரதேசத்தின் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , பல்துறை நிபுணர்கள் , வங்கி உத்தியோஸ்தர்கள் , தபால் திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , தொழில் அதிபர்கள் , தனியார் நிறுவன உத்தியோஸ்தர்கள் , அரச உத்தியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
0 comments: