Home » » அமைச்சரவை தீர்மானங்கள் (06-03-2019)

அமைச்சரவை தீர்மானங்கள் (06-03-2019)


01. இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் . 2018 -2025 (நிகழ்ச்சி நிரலில் 8வது விடயம் )
இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதார மூலோபாய சர்வதேச மட்டத்தில் ஆலோசகர்கள் மற்றும் துறையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மூலோபாய வழிகளின் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதற்காக பொருளாதாரத்தில் அடையாளங் காணப்பட்ட முக்கிய பிரிவை டிஜிட்டல் மயப்படுத்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் தேவையான டிஜிட்டல் அடிப்படை வசதிகளை முன்னெடுப்பதற்கான 3 பிரிவுகளக் கொண்ட கட்டமைப்பு கொண்டுள்ளது. இந்த மூலோபாயத்தின் மூலம் டிஜிட்டல் வசதியுடனான கல்வி மேம்பாட்டு வலயம் மற்றும் சேவை வழங்கும் கிராமம்இ மையப்படுத்திய விவசாயம் நிர்வாக மத்திய நிலையம் மற்றும் சுற்றுலா தரவுகளை பரிமாறும் மத்திய நிலையம் போன்ற முக்கிய வேலைத்திட்டம் … நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதே போன்று 3 வருட காலப்பகுதியில் டிஜிட்டல் மயத்துக்கு …. திட்டத்தை உள்ளடக்கிய பிரதான 10 திட்டங்ள் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச டிஜிட்டல் மூலோபாய வழிகள் தொடர்பில் அமைச்சரவையினால் அல்லாத டிஜிட்டல் அடிப்படை வதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமச்சரவையினால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. தேசிய ஒருமைப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்(நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
இலங்கையின் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இணக்கப்பாட்டிற்கு அமைய ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு முடியாத பின்னணி மற்றும் நிர்வாக வரையறை நாட்டிற்குள் ஏற்படுத்துவதற்கு இலங்கை கட்டுப்பட்டள்ளது.இதற்கமைவாக ஊழலுக்கு எதிராக முன்னெடுப்பதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்ப்பட்டிருந்தது. தேசிய ஒருமைப்பாட்டு வேலைத்தி;ட்டத்தின் கீழ் ஒழுக்க முறைகள் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புடன் நேர்மையான முறையைக் கொண்ட அரச சேவைiயை ஏற்படுத்தல் இலஞ்சம் மறறும்;; நிவாரணம் நடைமுறை தொடர்பாக அரச ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தல். மற்றும் சமூகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு பிரஜைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் சாட்சியாளர்கள் தகவல் வழங்குவோர் அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தை ஊக்குவித்தல் ஊழலுக்கு எதிராக அனர்த்த அறிவிப்பு விடுப்போரை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்காக முன்நின்று செயற்படுதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பில் வகுக்கப்பட்டுள்ள தேசிய ஒருமைபாட்டு திட்டம் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஊழல் அல்லது இலஞ்சக் குற்றச்சாட்டை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது
03. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நடைமுறைப்படுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டு ஆரம்ப ஆவணத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 1930ஆம் ஆண்டு இலக்கம் 29 கீழான நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாடு இலங்கையினால் 1950ஆம் ஆண்டிலும் 1957ஆம் ஆண்டு இலக்கம் 105 இன் கீழும் நடைமுறைப்படத்தப்படுதல் இரத்து செய்வது தொடர்பான இணக்கபாடு 2003ஆம் ஆண்டில் இலங்கையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலியல் நடவடிக்கைகளுக்கான நடைமுறையை பயன்படுத்துதல் சிறுவர் தொழிலாளி அடிமை வாழ்வு மற்றும் கடத்தல் உள்ளிட்ட நடை முறையை பயன்படுத்துவது தொடர்பாக அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு 1930ஆம் ஆண்டு இலக்கம் 29இன் கீழான நடைமுறை தொடர்பான இணக்கப்பாட்டிற்கு மேலதிகமாக ஏற்பாடுகள் ரீதியில் 2014ஆம் ஆண்டில் நடை முறை தொடர்பிலான இணக்கப்பாட்டிற்கு 29 இன் கீழான இலக்கத்தின் ஆரம்ப ஆவணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் தற்போது உள்ள நடைமுறை கட்டமைப்பின் ஆரம்ப ஆவணத்தின் மூலம் குறி;ப்பிடப்பட்டுள்ள பிரேரணையில் நிறைவேற்றப்பட வேண்டிய 1930 நடைமுறை இணக்கப்பாட்டிற்கான 2014ஆம் ஆண்டு இலக்கம் 14 29 கீழான ஆரம்ப ஆவணத்தை உறுதிசெய்வதற்காக செய்வதற்காக அமைச்சரவையில் அந்தஸ்து அற்ற தொழிலாளர் மற்றும் தொழில்சங்க தொடர்புகள் அமைச்சர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்கள் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
04. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA)  நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரையை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம்(MRIA) செயற்பாடுகளுக்காக இந்திய விமான சேவை அதிகார சபையினால் சமர்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழு மற்றும் இதற்கு உதவுவதற்காக திட்டக்குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த குழுவினால் தனது சிபாரிசுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் போக்குவரத்து சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05.மொத்த விற்பனை அடிப்படையில் விலைக்கு உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலை திட்டத்திற்கு பங்களிப்பு செய்த அ ங்காடி வர்த்தக நிலையங்களுக்கு ஏற்றுக்கொள்ளவேண்டி ஏற்பட்ட நட்டத்தை இழப்பீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 16ஆவது விடயம்)
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் வரையிலான நான்கு மாத காலப்பகுதிக்கு அரிசி சீனி உருளைக்கிழங்கு வெங்காயம் பருப்பு நெத்தலி மற்றும் டின்மீன் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் நுகர்வோருக்கு நிவாரணமாக முன்னெடுப்பதற்கான மொத்த விற்பனையின் விலை அடிப்படையில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு அங்காடி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இலங்கை சத்தோச நிறுவனம் ஆகிவற்றின் ஒத்துழைப்பு அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அத்தியாவசிய நுகர்வோருக்கான பொருட்களை நிவாரண விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கியமையினால் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடு செய்து வெளி கணக்காய்வாளரின் சிபாரிசின் அடிப்படையில் அரசாங்கத்தினால் செலுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட காகில்ஸ் (சிலோன்) பொது நிறுவனம் மற்றும் இலங்கை சத்தோச லிமிட்டட் நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 232மி;ல்லியன் ரூபா நட்டத்தை செலுத்துவதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில்பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06.காங்கேசன்துறை துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான காணியை கைமாற்றிக்கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 18ஆவது விடயம்)
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக தேவையான நிதி இந்திய அரசாங்கத்தின் நிவாரணத்துடன் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான காணியை கைமாற்றிக்கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக இலங்கை சீமெந்து கூட்டுதாபனத்திற்கு உட்பட்ட சுமார் 15ஏக்கர் கொண்ட காணியை கைமாற்றி கொடுப்பது சிறந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு இதில் 15 ஏக்கர் காணியை கைமாற்றிக் கொடுப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07.ஜனாதிபதி ஊடக விருது வைபவம் (நிகழ்ச்சி நிரலில் 25ஆவது விடயம்)
ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி ஊடக விருது விழா ஒன்றை வருடாந்தம் நடத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைவாக இந்த விருது விழாவில் விருதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் வாழ்நாளில் ஒருநாள் வழங்கப்படும் வெற்றியாளர்களுக்கான பண பரிசை வழங்குவதற்கும் ஆசிரியர் சபையின் செயற்படும் புத்திஜீவிகள் மற்றும் – கட்டுரை மற்றும் விமர்சன எழுத்தாளர்களின் பணிகளை பாராட்டுவதற்கும் கௌரவ விருதும் வழங்குவதற்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆணவத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 1995ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழாக இலங்கை கணக்கு மற்றும் கணக்காய்வு தர சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
1995ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான இலங்கை கணக்கு மற்றும் கணக்காய்வு தர சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கமைய இதுவரையிலான 20 வருட காலத்துக்கும் மேற்பட்ட காலம் செயற்பட்டதுடன் இதனை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறான வகையில் திருத்தம் மேற்கொள்வதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக தகுதியான ஒழுங்குறுத்தல் முறையின் மூலம் அரச துறையில் கணக்கு தர ஒழுங்குறுத்தலை உறுதி செய்வதன் தேவை கணக்காய்வு நிறுவனங்களின் செயற்பாடுகளின் தரத்தை பாதுகாப்பதற்காக ஒழுங்கு விதிகளை விதித்தல் இலங்கை கணக்கு மற்றும் கணக்காய்வு தர மதிப்பீட்டு சபையை வலுவூட்டுதல் போன்ற அத்தியாவசிய பரிந்துரைகளை உள்ளடக்கிய வகையில் இந்த சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட வகுப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09.சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்குடமை வேலைத்திட்டத்துக்கு நிதி வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)
சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்குடமை வேலைத்திட்டம் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 105 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள குறைந்த வருமானத்தை கொண்ட 57 500 குடும்ப பயனாளிகளின் வருமானத்தை நிலையானதாக மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உத்தேச வேலைத்திட்டமாகும். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 54.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்குவதற்கு விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் உடன்பட்டுள்ளது. அத்தோடு இதுவரையில் இதில் 39.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் 14.52 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10.அரசத்துறையில் பணியாளர்கள் சபை தொடர்பான 2018ஆம் ஆண்டின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அறிக்கை (நிகழ்ச்சி நிரலில் 28ஆவது விடயம்)
2018ஆம் ஆண்டில் 3ஆவது காலாண்டு பகுதியில் அரசத்துறையில் பணியாளர்கள் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் கவனத்திற்காக சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அளவில் அரசத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் சபை 1587803 ஆவதுடன் இதில் தற்பொழுது சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 1373338 ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அரசத்துறையில் சில நிறுவனங்களினால் தமது சேவைக்கான தேவையை கவனத்தில் கொள்ளாது பணியாளர்களை இணைத்து கொள்ளப்படுவதை தடுப்பதற்காக உரிய நடைமுறை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதன் சேவை தேவையை கவனத்தில் கொள்ளாது இணைத்துக்கொள்ளப்பட்டதினால் இவ்வாறான சேவை அதிகாரிகளின் அனுகூலமான வகையில் சேவையை பெற்றுக்கொள்வது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. என்பதினால் புதிதாக பணியாளர்களை இணைத்துக் கொள்ளும் பொழுது உரியவகையில் பணிகளை மதிப்பீடு செய்த பின்னர் மாத்திரம் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் இணக்கப்பாட்டுடன் இணைத்து கொள்வது பொருத்தமானது என அறிக்கையின் மூலம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசத்துறை பணியாளர் சபை தொடர்பிலான 2018ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டு தரவுகள் தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. மஹாபொல உயரக்கல்வி புலமைப்பரிசில் நிதிய சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 29ஆவது விடயம்)
1981ஆம் ஆண்டு இலக்கம் 66 கீழான மஹாபொல புலமைப்பரிசில் நிதிய சட்டம் லலித் அத்துலத் முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் பொறுப்பு நிலையமாக மாற்றி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சில நிர்வாக செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்காக இந்த சட்டத்தில் 3.2 மற்றும் 15ஆவது சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரையில் விடயதான பொறுப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் உயர் கல்வி விடயதான பொறுப்பு அமைச்சுக்கு வழங்குவது தொடர்பான திருத்தத்தை உள்ளடக்கி இந்த சட்டத்தின் 3.2 15 மற்றும் 19 ஆகிய சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொண்டு சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலம் தொடர்பில் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12.இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 5 மாடி இருதய நோய் சிகிச்சை பாதுகாப்பு கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்திய பீடத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கு உல்லக பயிற்சியை வழங்குவதற்காக தேவையான வசதிகளை செய்யும் நோக்கில் இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவைக்கு இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை சேவைக்கு தற்பொழுது போதுமான இட வசதி இல்லை என்பதினால் 5000 சதுர மீற்றர் நிலப்பரப்பை கொண்ட 5 மாடி கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 கட்டில்களைக் கொண்ட இருதய நோய் சிகிச்சை வார்ட்டும் 40 கட்டில்களைக் கொண்ட இருதய மார்பு சார்ந்த சிகிச்சை வார்ட்டும் இருதயம் தொடர்பான இரசாயன கூடமும் ஈ.சி.ஜி அறையும் ஹோல்டல் கண்காணிப்பு வசதியுடனான ஈ.சி.ஜி அலகும் எக்கோ காடியோ கிராபி அறைகள் இரண்டும் 10 கட்டில்களைக் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் சத்திரசிகிச்சை உதவியாளர் அறை மற்றும் ஏனைய உபகரண சேவை வசதிகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கமைவாக 1325.9 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் 2020 தொடக்கம் 2022 இடைக்கால வரவு செலவு கட்டமைப்புக்குள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை கட்டிடத் தொகுதி இதை நிர்மாணிப்பதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13.ஒளடதக தயாரிப்பு கூட்டுதாபனத்துடன் முதலீட்டின் மூலம் ஒன்றிணைந்த தொழில் நிறுவனங்களை அமைத்தலின் முன்னேற்றம் (நிகழ்ச்சி நிரலில் 34ஆவது விடயம்)
இலங்கை மருந்து தயாரிப்பு தொழிற்துறையை மேம்படுத்துவது மூலம் மருந்து வகை இறக்குமதிக்காக செலவாகும் வெளிநாட்டு நாணயத்தை சேமிப்பதை போன்று மருந்து வகைகளின் விலைகளை நிலையானதாக முன்னெடுப்பதற்கு வசதிகள் கிடைக்கின்றன. இதற்கமைவாக வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உயர் தரத்திலான மருந்து பொருட்களை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கக்கூடிய ஆற்றலை கொண்ட முதலீட்டாளர்கள் அடையாளம் கண்டு அந்த முதலீட்டாளர்களினாலும் அரச மருந்து கூட்டு வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியின் அடிப்படையில் 17 நிறுவனங்கள் அரச மருந்தக கூட்டுதாபனத்துடன் கூட்டு வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு தயாரிப்புக்கான கட்டிடம் முதலானவற்றை நிர்மாணிக்க பணிகள் இடம்பெறுவதினை அமைச்சரவை அறிந்துக் கொள்வதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
14.வைத்திய விநியோக வசதிகளை மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 35ஆவது விடயம்)
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் 134 வைத்தியசாலைகளில் செயற்படும் களஞ்சியசாலைகள் மற்றும் அரசாங்கத்தின் வைத்திய விநியோகப் பிரிவின் கீழ் உள்ள பிரதேச வைத்திய விநியோக 26 பிரிவுகளில் மேம்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது இருப்பினும் சுகாதாரப்பிரிவின் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் துரிதமான அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதிலும் அமைந்துள்ள அனைத்து வைத்திய விநியோகப் பிரிவுகளின் வசதிகள் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்ட 160 நிறுவனங்களுக்கு மேலதிகமாக 430 பிரதேச வைத்தியசாலைகள் 276 ஆரம்ப வைத்திய சிகிச்சை பிரிவுகளில் உள்ள மருந்து களஞ்சிய சாலைகளின் வசதிகள் 3988.6 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் 2020 தொடக்கம் 2022 ஆம் ஆண்டுக்குட்பட்ட இடைகால வரவு செலவு கட்டமைப்புக்குள் மேம்படுத்துவது தொடர்பில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமரப்;பித்த விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
15.பேருவளை காலி புரானவெல்ல குடாவெல்ல முதலான மீனவ துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 45 ஆவது விடயம்)
நாட்டை சுற்றிலும் 20 மீன்பிடி துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் திக்கோவிட்ட மீனவ துறைமுகம் தவிர ஏனைய எந்த ஒரு துறைமுகத்திலும் 55அடி அல்லது அதற்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்களை நங்கூரம் இடுவதற்கு போதுமான வசதிகள் இல்லை என்பது கண்காணிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் மீன்கள் தரையில் முறையான வசதிகள் இல்லாமை களஞ்சியப்படுத்துவதற்கான போதுமான வசதிகள் இல்லாமை முறையாக களஞ்சியப்படுத்துவதற்காக தற்போது பயன்படுத்தப்படும் சிறியளவிலான வள்ளங்களில் வசதிகள் இல்லாமையினால் குறிப்பிடத்தக்க அளவு மீன்கள் பிடிக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்படுவதாக நாரா நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால் பிடிக்கப்படும் மீன்கள் பாதிப்படைவதை குறைப்பதற்கும் மீன் அறுவடையின் தரத்தை மேம்படுத்துவதற்காக போதுமான வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு சர்வதேச தரத்திற்கு அமைவாக பசுமை துறைமுக எண்ணக்கருவின் கீழ் பேருவளை காலி மற்றும் புரானாவெல்ல – குடாவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்கள் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறைமுகங்கள் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றாடல் மற்றும் மதிப்பீடுகளை தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால் நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடற்தொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16.வரட்சியினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 46ஆவது விடயம்)
யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு வீடு மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான நீரை விநியோகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால நீண்ட காலத்துக்கு நடைமுறைகள் தொடர்பில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத் திட்டங்கள் மதிப்பீடு ஒன்று யாழ் மாவட்ட செயலகம் சமர்ப்பித்துள்ளது. இதற்கமைவாக 54.2 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் அல்லோ பிட்டி மற்றும் நுனாவில் மேற்கில் நீரை தேக்கி வைக்கப்படும் நீரை சேமித்தல் வேதர் அடோப்குலம் சாம்பலோடை புங்குடுத்தீவு கிழக்கு மற்றும் மடத்துவேலி ஊடான நீரை தடுத்தலுக்கான பரிந்துரையை புனர்வாழ்வு மற்றும் மேம்படுத்துதல் மற்றும் நலிந்து போன குளங்களை சீர்செய்வதற்காக அரச நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17.கருங்கல் கலை சிற்பத்தை பாதுகாத்து மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 47ஆவது விடயம்)
இலங்கை இனத்தவர் மீது இடம்பெற்ற வெளிநாட்டு ஆக்கிரமிப்பை வெற்றிக்கொள்வதற்காக தேசிய அடிமைப்படுத்தல் முறையான கருங்கல் போராட்ட சிற்ப முறை மற்றும் கருங்கல் போராட்ட சிற்பிகளினால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு முக்கியமானதாகும். இலங்கை வரலாற்றில் சர்வதேசத்தின் முன்வைக்கக்கூடிய அடையாள முறையான சிற்ப கருங்கல் போராட்ட சிற்பத்தின் அடையாளத்தை பரம்பரையினருக்காக பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனால் கருங்கல் போராட்ட சிற்பத்தை தடை செய்து ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் 1817ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கும் இந்த போராட்ட கலை மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட கலை சிற்பங்களை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18.தேசிய சிவில் விமான சேவை கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 49ஆவது விடயம்)

தேசிய சிவில் விமான சேவை கொள்கையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சமரப்;பிக்கப்பட்ட திருத்தச் சட்டத்தை மீள மதிப்பீடு செய்து சமரப்;பிப்பதற்கு அமைச்சரவையில் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி திருத்த வரைபு செய்யப்பட்டுள்ள கொள்கை மேலும் திருத்தத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அதற்கமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள இறுதி திருத்த சட்டமூலத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரனதுங்க அவர்கள் சமர்ப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19.இலங்கையில் சிறுவர்களுக்காக மாற்று கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 51ஆவது விடயம்)
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் குடும்பங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலையை கொண்டுள்ள சிறுவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவது மூலம் அவ்வாறான சிறுவர்களை குடும்பத்துக்குள்ளேயே வைத்துகொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுதல். குடும்பத்தில் இருந்து வெளியேரும் சிறுவர்களுக்கும் உறவினர்களின் பொறுப்பின் கீழ் உட்படுத்துவதற்கும் பொருத்தமான நபர் ஒருவரின் பாதுகாப்புக்குட்படுத்தல். பாராமரிப்பதற்கும் போன்ற மாற்று பாதுகாப்பு முறையினூடாக வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மாற்று பாதுகாப்பு முறையை முறையாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாற்று பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு சிறுவர்களுக்கு மாற்று பாதுகாப்பை வழங்குவதற்கான காரணம் அது தொடர்பிலான நிலைக்கு உள்ளாகும் சிறுவர் குழுவினரை அடையாளம் காணுதல் அவர்களுக்கு பொருத்தமான மாற்றுமுறையை அறிமுகப்படுத்துதல் சிறுவர்களை மாற்று பாதுகாப்பு முறையில் ஈடுபடுத்துவதில் உள்ள அடிப்படை சிறுவர்களை நிறுவனமயப்படுத்துவதை தடுக்ககூடிய நடைமுறைகளை அடையாளப்படுத்துதல் சிறுவர்களுக்கு சேவைகளை வழங்குவோரை அடையாளம் காணுதல் சட்டத்தின் முன் சிறுவர்களுக்காக மேற்கொள்ளக்கூடிய முறை சிறுவர்களை சமூகமயப்படுத்துதல் மாற்று பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்துதல் போன்ற அடிப்படை பிரிவுகளின் கீழ் வகுக்கப்பட்டுள்ள கொள்கை தொடர்பில் மகளிர் மட்டும் சிறுவர்கள் அலுவல்கள் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சர் சந்ராணி பண்டார அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20.உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடுத்தர அளவிலான குளிரூட்டி கட்டமைப்புக்கு சிலர் இயந்திரத்தை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 52ஆவது விடயம்)
உயர் நீதி மன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்ற பணிகள் முன்னெடுக்கப்படும். கட்டிடத்தொகுதியில் குளிரூட்டியுடனான வசதிகளை மேம்படுத்துவதற்காக உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடுத்தர அளவிலான குளீரூட்ட சிலர் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக நீதி மற்றும் சிறைசாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21.மாத்தறை வஸ்கொட கொட்டபொல மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம வீதிகளை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 54ஆவது விடயம்)
மாத்தறை மாவட்டத்தில் வஸ்கொட கொட்டபொல மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் தேவையான வளங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதின் காரணமாக இந்த திட்டம் விரைவாக ஆரம்பிக்க முடியாமற்போனது. இதற்கமைவாக கெட்டவல ஹெரகல ரஜவத்த கேகுநஹென இசுறுஉயன உதாதெனிய நிஸ்ஸங்க புர சியம்பலா கொட கிழக்கு இளைஞர் சேவை வீதி மற்றும் சியம்பலாகொட வீதி அபிவிருத்திக்காக தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக அவர்கள் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22.ஏற்றுமதிக்கான பெற்றோலியம் சுத்திகரிப்பை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)
வருடம் ஒன்றுக்கு 10 மெற்றிக்தொன் வலுவைக்கொண்ட ஏற்றுமதிக்கான பெற்றோலியம் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்கு சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இன்டர்நெசனர் தனியார் நிறுவனம் மற்றும் ஓமோன் சுல்தான் நாட்டின் எரிபொருள் மற்றும் எரிவாயு அமைச்சுடன் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக முயற்சியை முன்னெடுப்பதற்காக பரிந்துரை சமரப்;பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முதலீட்டு பரிந்துரையை கவனத்தில் கொண்டு உத்தேச தொழிற்சாலை ஸ்தாபிப்பதற்கு தேவையான 400 ஏக்கர் காணியை முதலீட்டுக்காக குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கென அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23.தொழிற்துறை மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி TVED அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 60ஆவது விடயம்)
போதுமான தொழில் அல்லது தொழிற்துறை ஆற்றலுக்கு அப்பால் 60ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மனித வள சக்திக்கு ஒன்றிணைகின்றனர். இவர்கள் தொழில் அற்ற அல்லது குறைந்த சம்பளத்துடன் தொழில்களில் ஈடுபடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தொழில் கல்வி மற்றும் பயிற்சி பிரிவுகளில் இளைஞர் யுவதிகளில் கவருவதில் சிரமங்கள் இருப்பதாக தெரியவந்துள்ள இந்த மனிதவள சந்தைக்கு தேவையான திறனாற்றல் மற்றும் ஆற்றல் மிக்க தொழிலாளர் சக்தியை உருவாக்குவதற்காக தொழில் மற்றும் தொழில் கல்வி பயிற்சி பிரிவில் இளைஞர் யுவதிகளை கவருவதற்காக வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான விஷேட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு தேவையான மானியங்களை ஒதுக்கீடு செய்வதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்;சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24.இலங்கை மத்திய வங்கியில் கணக்காய்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் அனுபவமிக்க சேவைகளை பெற்றுகொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)
இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வு நடவடிக்கைகளுக்காக பொருத்தமான சர்வதேச அனுபவத்தை கொண்ட நிறுவனங்களின் சேவையை பெற்றுக்கொள்வதினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனையை பாராட்டி மற்றும் நிதி பரிந்துரையை பாராட்டியதன் பெறுபேறாக அமைச்சரவையின் ஆலோசனை பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய தெரிவுசெய்யப்பட்ட இந்தியாவின் Ms/BDO india LLP நிறுவனம் மற்றும் Ms/KPMG Srilanka  சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25.2019 ஏப்ரல் மாதத்துக்கு தேவையான உரம் (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)
வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்துக்காக ஏப்ரல் மாதத்துக்கு தேவையான இரசாயன உரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாசிசுக்கமைய யூரியா (கிரேனி யுலா) 27 ஆயிரத்து 400 மெற்றிக்தொன் ஒன்றை 318.75 அமெரிக்;க டொலர்களுக்கும் எக்ரி கோமோடிடீஸ் அன்ட் பைனஸ் நிறுவனத்திடம் கொள்வனவு செய்வதற்கும் மியுரி செட் ஒப் பொட்டேஸ் 3000 மெற்றிக்தொன்னை ஒரு மெற்றிக்தொன்னை 352.85 அமெரிக்க டொலர்களுக்கு பெலன்சி இன்டர்நெசனல் ட்ரெட்ங் பிரைவட் லிமிட்டட் கொள்வனவு செய்வதற்கும் கிபல் சுப்பர் பொஸ்பேட் மெற்றிக்தொன் பத்தாயிரத்தை ஒரு மெற்றிக்தொன் 317 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு அனுமதி பெற்றுகொள்வதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் கடல் தொழில் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26.மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)
2019ஆம் ஆண்டில் 8 மாத காலத்திற்காக மர்பேன் மசகு எண்ணெய் Murban crude oil  கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய சிங்கபூரை சேர்ந்த MS swiss Singapore ovrses  enterprises pte ltd வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
27. திரிபிட்டகவை உலக மரபுரிமையாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 83ஆவது விடயம்)
பாலி மொழியிலும் சிங்கள மொழியிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள திரிப்பிட்டக 2019 ஆம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி மாத்தளை வரலாற்று சிறப்பு மிக்க அலு விகாரையில் தேசிய மரபுரிமையான அதிமேதகு ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இது தொடர்பான 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டது. தற்பொழுது அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கபெற்ற வகையில் திரிப்பிட்டகயை உலக மரபுரிமையாக முன்னெடுப்பற்கான பரிந்துரை ஜ.நா.சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பிடம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி கையளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி காலப்பகுதியில் திரி;ப்பிட்டக வந்தனா என்ற பெயரில் நாடு தழுவிய ரீதியிலான வேலைத்திட்டம் பொதுமக்களின் பங்களிப்புடன் ;;; திரி;பிட்டகவை உலக மரபுரிமையாக முன்னெடுப்பதற்காக தேசிய வைபவம் கண்டி ஸ்ரீ தலதாமாளிகை வளவில் மாமலுவையில் மேற்கொள்வதற்கும் அதற்கு தேவையான செய்வதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28.தொல் பொருட்களை பாதுகாத்தல் மற்றும் அவற்றை அழித்தல் திருடுதல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 87ஆவது விடயம்)
1940ஆம் ஆண்டு இலக்கம் 9 கீழான தொல்பொருள் கட்டளைச் சட்டம் இறதியாக 1998ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அத்தோடு தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பில் தற்போது உள்ள சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் உடனடி ஒழுங்குகளை முன்னெடுக்கப்பட வேண்டியவை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைவாக தொல்பொருள்களை அழித்தல் திருடுதல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தொல்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தவறுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள மற்றும் ஊக்குவித்தல் மற்றும் தொல்பொருள் பாதிப்பு தொடர்பான தவறுகளுக்கான தண்டப்பணத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |