Home » » சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது

சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது


(க. விஜயரெத்தினம்)
இலங்கையின் 71ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(4.2.2019)காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும்,அரசாங்க அதிபருமான மாணிக்கம்-உதயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவும் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகள், மாவட்ட திணைக்களத் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள், மாட்ட திட்டமிடல் பணிப்பாளர்,அரச உத்தியோகஸ்தர்கள்,பாடசாலை மாணவர்கள்,உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இதன்போது பாரம்பரிய கலாச்சார நிகழ்வுடன் அதிதிகளை வரவேற்றல், தேசியகொடியேற்றல்,பொலிஸ் மரியாதை அணிவகுப்பு,தலைமையுரை,அதிதிகள் உரை,மாவட்ட செயலகத்தில் சிரமதானம்,பூசை வழிபாடுகள் என்பன இடம்பெறவுள்தாக அவர் மேலும் தெரிவித்தார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |