Home » » இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் கடவுச் சீட்டுக்களை மாவட்டச் செயலகத்தினூடாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன.
பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |