Home » » மட்டு மண்ணின் மைந்தனுக்கு தமிழக ஆளுநரால் சூட்டப்பட்ட கலாநிதி பட்ட விருது.

மட்டு மண்ணின் மைந்தனுக்கு தமிழக ஆளுநரால் சூட்டப்பட்ட கலாநிதி பட்ட விருது.

மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் படுவான்கரை தந்த கல்விக் கலங்கரை அம்பிளாந்துறை கிராமத்தை சேர்ந்த திரு முருகு. தயாநிதி (சிரேஸ்ர விரிவுரையாளர் தேசிய கல்வி நிறுவகம்) அவர்கள் தனது கலாநிதி பட்டப்படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு மட்டக்களப்பு தமிழகம் கலாநிதி ஒருவரை பிரசவித்துள்ளது.
மூன்று தசாப்த யுத்த வடுக்களின் தாயக பூமியான படுவான் மண் உண்மையில் இன்று பூரித்திருக்கும்.மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் முருகேசு – பொன்னம்மா தம்பதியினருக்கு கடைப்புதல்வனாகப்பிறந்து இன்று படுவான் மண்ணை தமிழக ஆளுநரின் கரங்களுக்கருகில் அழைத்துச் சென்றிருக்கும் கலாநிதி முருகு தயாநிதி அவர்கள் பாராட்டுக்குரியவர்.
அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் மற்றும் குருக்கள்மடம் வாணி வித்யாலயம்என்பவற்றில் ஆரம்பக்கல்வியைக் கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது இதர பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்து இன்று இந்தியாவில் தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்ட ஆய்வை பூர்த்தி செய்து தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களது கரங்களால் தனது முனைவர் பட்ட ஆய்வின் பட்ட மகுடத்தை பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தருணத்தில் கலாநிதி பட்டத்தினை பெற்று எமது மண்ணுக்கு பெருமை பெற்றுத்தந்த திரு.முருகு தயாநிதி அவர்களுக்கு KEYUTAMIL.COM சார்பான வாழ்த்துக்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |