வடமராட்சி- கரணவாய் தெற்கில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா (வயது-32) என்ற கற்பிணிப் பெண் வைத்தியசாலையில் வேலை முடித்து விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
|
அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments