Home » » இந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் : (முழுமையாக வாசிக்க)

இந்த வார அமைச்சரவை தீர்மானங்கள் : (முழுமையாக வாசிக்க)


2019.01.29 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
01. நீர் வழிகள் ஊடாக கரையோரத்திலும் கடலிலும் சேரும் கழிவு பொருட்களை கட்டுபடுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)
கரையோரத்துக்கும் கடலிலும் சேரும் 90 சதவீதமான கழிவுப் பொருட்கள் தரைப்பகுதியில் இடம்பெறும் மனிதர்களின் செயற்பாடு மற்றும் கைத்தொழில் துறைகளே காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றுடன் சமூக பொருளாதார மற்றும் பயன்பாடு பிரச்சனைகள் உருவாகியுள்ளன. கரையோரத்தின் தரத்தை உறுதிசெய்வதற்காக சர்வதேச தர ரீதியில் கருதப்படும் டென்மார்க்க சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான அடிப்படையின் மூலம் வெளியிடப்படும் டீடரந கடயபள சான்றிதழை இலங்கையின் கரையோரப்பகுதிக்காக பெற்றுக்கொள்வதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதே போன்று இந்த நாட்டின் சுற்றுலா தொழிற்துறைக்கு கரையோரம் மற்றும் கடலை அண்டிய பிரேதசங்களின் மூலம் 70சதவீதமான பங்களிப்பு வழங்கப்படுவதனால் உலகில் சிறந்த சுற்றுலா தொழிற்துறையாக இலஙகைக்கு கிடைத்தள்ள தரத்தை பாதுகாத்து 2020ஆம் ஆண்டளவில் 4மில்லியன் சுற்றுலா பயணிகளை கவரும் இலக்கை பூர்த்தி செய்வதற்கு சுத்தமான கரையோரம் மற்றும் சமுத்திரத்தை முன்னெடுப்பது தேவையாக உள்ளது. இதற்கமைவாக நீர்வழிகள் மாசடையாமல் சுத்தமாக முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. மர தயாரிப்புக்களுக்காக வன அபிவிருத்தி –(நிகழ்ச்சி நிரலில் 9ஆவது விடயம்)
இலங்கையின் மரங்களின் தேவை வருடாந்தம் அதிகரித்து வருவதினால் அதற்கமைவாக மரங்களுக்காக தற்பொழுது உற்பத்தி செய்யப்பட்டுள்ள காட்டு உற்பத்திகள் மூலமான பயன்களை மேம்படுத்துவதற்காகவும் புதிய வன உற்பத்தியைமுன்னெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய வன உற்பத்தியை மேற்கொள்வதற்காகவவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் மாவட்டங்களில்500 ஹெக்டயர் நிலம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மரங்களுக்கான கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு மேலதிகமாக பிரதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் வனவளத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக மகாவலி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)
மோதலின் காரணமானஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வு பணிகள் நிலையான இயற்கை கழிவறை சுகாதார வசதிகள் நீர்விநியோகம் வீதிகள் மற்றும் மின்சார தொடர்புகள் போன்ற பொருளாதார அடிப்படை வசதிகள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை நிறுவப்படுவதை துரிதமாக மேற்nhள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக வீட்டுரிமையாளரினால் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 4750 வீடுகளைக் கொண்ட வீட்டு அலகொன்றை நிர்மாணிப்பதற்கும் இந்த பிரதேசத்திற்கு தேவையான பொருளாதார சமூக அடிப்படை வசதிகளை மேமப்படுத்துவதற்கும் பனையுடன் தொடர்புபட்ட தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக திக்காமம் டிஸ்டிலரிஸ் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கும் கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. அரச நிறுவனங்களில் திட்டமிடுதல் மற்றும் முகாமைத்தவ அருங்கலை முறையாக அபிவிருத்தி பெறுபேறுக்கான முகாமைத்துவம்(ஆகுனுசு) என்ற எண்ணக்கருவை பயன்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)

அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் நவீன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ அருங்கலை முறை அபிவிருத்தி பெறுபேறுக்காக முகாமைத்தவம் என்ற எண்ண்கருவில் அரச துறைகளில் முகாமைத்துவத்தை சுழற்சி முறையாக ஆக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தேசிய பேண்தகு அபிவிருத்திஇலக்கிறகான முக்கிய பணியக புள்ளி சுட்டெண் இலக்கத்தை நோக்கி அரச முகாமைத்துவ பணி மேற்கொள்ளப்படுகிறது. அபிவிருத்தி பெறுபேறுக்கான முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்பமாக 5அமைச்சுக்கள் மற்றும் 2 மாகாண சபைகளுக்கான உத்தேச திட்டமாக நிறுவனமயப்படுத்துவதற்கும் இதன் வெற்றியின் அடிப்படையில் அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த எண்ணக்கரு திட்டத்தை பயன்படுத்துவதற்hகக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பிராந்திய வணிக விமான பயணங்களை முன்னெடுப்பதற்காக பலாலி (காங்கேசன்துறை) விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டுக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நேர அட்டவணைக்கு அமைய சர்வதேச வர்த்தக பயணிகள் விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தவதற்கும் பலாலி விமான நிலைய தேவையான அபிவிருத்தி பணிகளை 1950மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்வதற்காக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கண்டி பல்லின போக்கலரத்து நிலையத்தை நிர்மாணிப்பதன் காரணமாக அழுத்தத்திற்குள்ளான நபர்களுக்கு நஷ்டஈடு வழங்கல் – (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தில் கண்டி பல்லின போக்கவரத்து முனைகளை வுநசஅiயெடள அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடையாளங் காணப்பட்டுள்ளது. 11700 மில்லியன் ரூபா முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மூலம் கண்டி நகரத்தின் மக்கள் வாழ்க்கையில் மற்றும் கலாசார உரிமையில் தரமானதாக அபிவிருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய சுற்றாடலுக்கு பொருத்தமான போக்குவரத்து கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக இந்த பிரதேசத்திவ் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் அடங்கலாக சுமார் 820பேர் தமது வாழ்வாதாரத்தை இழப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த தி;ட்டத்தின் காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுவதற்காக நியமிக்கப்பட்ட உரிமையை மதிப்பீடும் வேதியியல் மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுக்கமைய சம்மந்தப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தேயிலை மற்றும் தெங்கு பெருந்தோட்ட துறைகளில் பலன்களை மேம்படுத்தவதற்hகாக வசதிகளை வழங்குதல் – (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)

சிறிய தேயிலைத் தோட்டம் மற்றும் தெங்கு தோட்டங்களினால் தொழிற்துறைக்கு மொத்த உற்பத்திக்கு வழங்கும் பங்களிப்பு கடந்த பல வருடங்களில் அதிகரித்து வருவதாக மதிப்பீடுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த பங்களிப்பை மேலும் மேம்படுத்தவதற்கு சாத்தியககூறு இரப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறிய தேயிலைத் தோட்டம் தெங்கு தோட்டங்களின் உற்பத்திகளின் நன்மைகளை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவுணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. விவசாய திணைக்களத்தின் விதை மற்றும் நடுவதற்கான பொருட்களை விநியோகிக்கும் கட்டமைப்பை நவீனமயப்படுத்தல் ( நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
நெல் ,மேலதிக உணவுப் பயிர் மற்றும் மரக்கறி வகைகளுக்கு உறுதிசெய்யப்பட்ட விதை மற்றும் நடுவதற்கான பொருட்கள் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் 27விதை பண்ணைகள் மூலமும் ஒப்பந்த அடிப்படையில் விதை உற்பத்தி வேலைத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. இந்த விதைப்பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி செயற்பாடுகளுக்கான உரிய நீர்பாசன வசதி இல்லாமை இயந்திர உபகரணங்கள் இல்லாமை களஞ்சிய வசதி போதுமானதாக இல்லாமை , போக்குவரத்து வசதி இல்லாமை மற்றும் தேவையான வசதிகள் இல்லாததின் காரணமாக அடிப்படை விதைகளுக்கான தேவைக்கான இலக்கை பூர்த்தி செய்வது சிரமமாக உள்ளது. இதனால் விதை செயலாக்க இயந்திரமயம் மாஇழுப்பல்லம, அம்பாறை மற்றும் அலுத்தரம விவசாயப் பண்ணை ஆகியவற்றை ஒன்றிணைந்த விதை மற்றும் நாட்டும் பொருட்பளுக்கான கட்டமைப்பொன்றை அமைத்தல் பெல்வேஹர மற்றும் படஅத்த விவசாய பண்ணைகளுக்கு மேலதிக பயிர் உற்பத்தி விதைகளை தெரிவுசெய்வதற்கான புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கொள்வனவு செய்தல் ரஹங்கல சீதாஎலிய படஅத்த மற்றும் அம்பாறை விவசாய பண்ணைகளில் நான்கு களஞ்சியசாலைகளை நிர்மாணித்தல் விதை மற்றும் நடும்; பொருள் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துதல் விவசாயத்திற்கான நீர் விநிபோகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகளை மேம்படுத்தவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 335 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
09. பேண்தகு விவசாய அபிவிருத்தி மத்திய நிலையமொன்றினை அமைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 28 ஆவது விடயம்)

மாகந்துரயில் அமைந்துள்ள இயற்கை விவசாயத்திற்கான விசேட கேந்திரத்தின் மூலம் இயற்கை விவசாய விவசாய தொழிற்துறை மற்றும் இயற்கை உரம் தொடர்பான ஆய்வு மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறுவதுடன் மாகந்துர விவசாய ஆய்வு மற்றும் மத்திய நிலையத்தின் மூலம் பயி;ர் மேம்பாடு ஊக்குவித்தல் போசாக்கு போன்ற துறைகள் குறித்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்பொழுது சுற்றாடலுக்கு பொருத்தமான விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையமொன்றை அமைப்பதன் தேவை ஏற்பட்டிருப்பதினால அதற்கமைவாக இந்த 2 நிறுவனங்களையும் ஒன்றிணைத்த பேண்தகு விவசாய அபிவிருத்தி மத்திய நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. விதை மற்றும் நடும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்தல் (நிகழ்ச்சி நிரலில் 29ஆவது விடயம்)
தரமான விதை மற்றும் நடும் பொருள் பாவனை மூலம் அறுவடையை 15 – 20 சதவீதம் வரையிலான அளவில் மேம்படுத்த முடியும் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது. இதனால் இதற்கு தரமான விதை உற்பத்தியில் தேவையான உபகரணங்கள் மற்றும் சேவைகள் விவசாயிகளுக்கு வழங்குதல் புதிய தாவர வகை வளர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி நடும் பொருட்களை பிரபலயப்படுத்தல் சந்தையில் விற்பனைக்குள்ள விதை மற்றும் பொருட்களின் தரத்தன்மையை உறுதிசெய்தல் தரமான நடும் பொருட்கள் உறபத்தி தொடர்பில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை தெளிவுபடுத்தவதற்கு ஊடக பிரசார முறையை பயன்படுத்துதல் மற்றும் நடும் பொருள் உற்பத்தி தொழிற்துறை பணிகளை விரிவுபடுத்துவதற்காக திட்டம் வகுக்கப்படும். இந்த பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம ;மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 1980ஆம் ஆண்டு இலக்கம் 33 கீழான பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குருத்தும் பொறிமுறையை வலுவூட்டல் (நிகழ்ச்சி நிரலில் 30ஆவது விடயம்)

இலங்கையில் பூச்சிக்கொல்லிகளை ஒழுங்குருத்தல் பணி 1994ஆம் ஆண்டு இலக்கம் 6 மற்றும் 2011ஆம் ஆண்டு இலக்கம் 31 சட்டங்களில் திருத்தம் 1980ஆம் ஆண்டு இல 33 பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்துதல் சட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறை ஆரம்பம் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய சுமார் 70 வகையான பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை தற்பொழுது சுமார் 700ஆக பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதே போன்று தொழிற்துறையில் உலக ரீதியில் இடம்பெற்றுள்ள அளவு மற்றும் அபிவிருத்திககு; அமைவாக பூச்சிகொல்லிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கமைவாக பூச்சிக்கொல்லிகளில் அடங்கியுள்ள தரத்தன்மையை பாதுகாத்தல் உணவு பயிர்களுக்கு தேவையான ஒழுங்குருத்தலில் அவசியத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை வலுவூட்டுதல் தேசிய உணவு பாதுகாப்புத் தன்மை மற்றும் பாவணையாளர்களை பாதுகாப்பதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதகமான வசதிகளை விரிவுபடுத்துதல் உலகளாவிய விவசாய தயாரிப்பு மேம்பாடு மற்றும் சிறந்த விவசாய நடைமுறையை பிரபல்யடுபத்துதல் விவசாய துறையில் பூச்சிக்கொல்லிகள் மாத்திரமின்றி அவை மற்றும் தொடர்புபட்ட ஏனைய துறைகளை உள்ளடக்கும் வகையில் ஒழுங்குறுத்தல் நடைமுறையை விரிவுபடுத்தல் தேவையான தரவுக்கட்டமைப்பை கட்டியெழுப்புதல் நிர்வாக கட்டமைப்பை வலுவூட்டல் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தேசிய அளவில் விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை அமைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 31ஆவது விடயம்)
இரசாயன உரம் இஙற்கை உரம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்தும் தன்மை மற்றும் மேலதிக பயன்பாடு ஒழுங்குறுத்தல் உணவு மண் மற்றும் நீர்த்தேவை மற்றும் கழிவு மட்டம் மதிப்பிடுவதற்கும் நவீன வசதிகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வுக் கூடமொன்றை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்மைவாக விஞ்ஞன கூடம் மற்றும் உபகரணங்கள் வசதிகளை வழங்குவதற்கு இதன் மூலம் பரிசோதனை ஆய்வை. மேம்படுத்துதல் மற்றும் தரத்தை உறுதிசெய்வதற்கும் விவசாய பயன்பாடுகள் மற்றும் முறையாக பயன்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கும் விவசாய இரசாயன பொருள் மற்றும் உரப்பாவணை மற்றும் விநியோகித்தல் முறை பயிற்சியை வழங்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையை எட்டுதல் நிகழ்ச்சி நிரலில் இல 40,43,44,45)

விமான சேவை பணிகள் தொடர்பில் சர்வதேச புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான் கட்டார் இஸ்ரேல் மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளுடன் இலங்கையருக்காக அதிகார மட்டத்தில் உடன்பட்டுள்ள விமான சேவை உடன்படிக்கைகளில் அதிகார பிரதிநிதியினால் கையெழுத்திடவும் அதன் பின்னர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிக்கும் வகையில் இந்த இருதரப்பு விமான சேவை உடன்படிக்கையை முன்னெடுபதற்கும் போக்குவரத்து விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கள அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 1978 இலக்கம் 2இன் கீழான நீதிமன்ற அமைப்பு சட்டத்தில் 45ஆவது சரத்தை திருத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 49ஆவது விடயம்)
1978 இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் 45ஆவது சரத்துக்கமைய ஏதேனும் காலம் மாவட்டம் அல்லது தொகுதிக்காக சமாதான நீதவான்களை நியமிக்கும் அதிகாரத்தை நீதிமன்ற விடயத்திற்கு பொருப்பான அமைச்சருக்கு வழங்குதல் இதற்கமைவாக இதன் பதவிக்கு நியமிக்கப்படுபவரின் குடியிருப்பை கவனத்தில கொண்டு பொருத்தமான வகையில் ஏதேனும் நீதிமன்ற வலய அல்லது மாவட்டம் அல்லது தொகுதி ஒன்றில் சேவை மேற்கொள்ளக்கூடிய வகையில் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுவர். இருப்பினும் அடிக்கடி நீதிமன்ற வலயம் மாற்றப்படுவதன் காரணமாக சமாதான நீதவான்கள் தமது நீதிமன்ற வலயங்களை அடையாளங் காண்பதில் ஏற்படும் சிரமங்களை கவனத்தில் கொண்டு நீதிமன்ற வலயத்திற்கு மாவட்டத்திற்கு அல்லது தொகுதிக்கு சமாதான நீதிவான்களை நியமிப்பதற்கு பதிலாக நிர்வாக மாவட்டத்திற்காக சமாதான நீதிவான்களை நியமிக்க கூடிய வகையில் 1978ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற செயற்பாட்டு சட்டத்தின் 45 ஆவது சரத்தை திருத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக திருத்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தத்தை வர்தமானியில் வெளியிடுதல் மற்றும் அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. களனி கல்வி வலயத்தில் தமிழ் மொழி தேசிய பாடசலையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 55ஆவது விடயம்)
கம்பஹா வத்தளை பிரதேசத்தில் வாழும் தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவதற்காக அருண் பிரசாத் அமைப்பினால் கல்வி அமைச்சிடம் பரிசு உறுதிபத்திரத்தின் மூலம் வழங்குவதற்கு உள்ள சொத்தை பயன்படுத்தி அருண் மாணிக்க வாசகம் இந்து வித்தியாலம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து இன மக்களுக்காக பாசாலை யொன்ற களனி கல்வி வலயத்தில் அமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழி சமூக மேம்பாடு இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியவ வடக்கு மற்றும் கிழக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)
வடக்கு கழக்கு மாகாணங்களில் வாழ்வோரின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்;படுத்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக அந்த பிரதேசங்களில் வீடு கட்டமைப்பை புனரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் சீர்சி – நேம் கூட்டு வர்த்தகத்திடமும் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட் கேடீர் வீரசிங்க மற்றும் தனியார் நிறுவனத்திற்கும் கிழக்கு மாகாணத்த்pலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீதிகளை புனரமைக்கும் ஒப்பந்தம் ஆலோசனை பொறியியலாளர் மற்றும்; தனியார் நிறவனத்திடமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு உட்பட்ட வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் நவலோக் கன்ஸ்ட்ரக்ஷன் தனியார் நிறவனத்திற்கும்; கிழக்கு உள்ளுராட்சி மன்றத்தக்கு உட்டபட்ட வீதி புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட சீனோ ஐக்ரோ கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக கௌரவ பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. களனி ஸ்ரீ ஜயவர்தனபுர சபரகமுவ மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் வசதிகளை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)
உயர்கல்வி துறையில் தரத்தை மேலும் மேம்படுத்தவதற்காக பல்கலைக்கழகங்களில் அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐந்து மாடி தங்குமிட கட்டிடமொன்றை நிர்மாணித்தல், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் 7 மாடிகளைக்கொண்ட பல செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டமாக அங்கு 3 மாடிகள் அமைக்கப்படவுள்ளன. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்திற்காக பீட கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டப கட்டிடம் மற்றும் இங்கு பொறியியல் பீடத்தின் பல்லின செயற்பாடு கட்டிடமொன்றை நிர்மாணிக்கப்பட்டு வரும் பணிகளை; நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமில் நீர்வநியோகம் மற்றம் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. ஹொரண பாதுக்கை மற்றும் அபரண வாழைச்சேனை நீர் வுசயளெஅளைளழைn வலைப்பினலை ; மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
இலங்கை மின்சாரசபைக்கு உட்பட்ட வுசயளெஅளைளழைn வலைப்பின்னலை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி தொழிற்துறையின் அடிப்படையில் மேம்படுத்துவதற்கான முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் ஹொரண பாதுக்கை இடையில் 25 கிலோமீற்றர் வுசயளெஅளைளழைn நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் ஹபரண – வாழைச்சேனைக்கிடையில் வுசயளெஅளைளழைn கொண்ட 2 கட்டமைப்புக்களை மேட்கொள்வதற்கான ஒப்பந்தம் ஆஃ ள ஊhiயெ யேவழையெட நுடநஉவசiஉ நுபெiநெநசiபெ உழ. டுவன நிறவனத்திடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. தேசிய வுசயளெஅளைளழைn மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வலைப்பின்னல் . மேம்படுத்தும் திட்த்தின் கீழ் அதற்கானவற்றை நிர்மாணித்தல் மற்றும் வலுவை மேம்படுத்தவதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது)
மின்கட்டமைப்பில் வுசயளெஅளைளழைn மற்றும் விநியோக கட்டமைப்பை அபிவிருத்தி செயல்திறன் அடிப்படையில் மேம்படுத்துதல் கூறுகள். 4இன் கீழ் நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3ஆவது கூறு ரீதியில் திட்டமிடப்பட்டுள்ளவற்றை நிர்மாணித்தல் மற்றும் வலுவை மேம்படுத்துவதற்கான திட்ட ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டநிலையியற் பெறுகைக் குழுவின் முiனெநn ஊழசிழசயவழைn மற்றும் நிறுவனத்தினால் எட்டபட்ட கூட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்காகமின்சக்தி மற்றும் முயடியவாயசர Pழறநச வுசயளெ அளைளழைn ; எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. லக்விஜய நிலக்கரி மின்அணுவில் நிலக்கரி பிரிவின் வலுவை மேம்படுத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)
நுரைச்சோலையில் லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பிரிவில் நிலக்கரி பயன்பாடு 742421 மெட்ரிக்தொன் ஆவதுடன் இதன 3 மாத காலத்திற்கு நிலக்கரி தேவையை களஞ்சியப்படுத்துவதற்கான வசதி போதுமானதாகும் இதனை 6 மாதத்திற்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விரிவுபடுத்துவதற்காக இதன் களஞ்சிய கொள்வனவை 1.21மெட்ரிக் தொன்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட் நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஆஃள ஊhiயெ ஆயஉhiநெசல நுபெiநெநசiபெ ஊழசிழசயவழைn குழுமவிடம் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிதாக களஞ்சிளசாலையை நிர்மாணித்தல் மற்றும் தற்பொழுதுள்ள களஞ்சியசாலைகைளை சீர்செய்தல் ( நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
விவசாய துறையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக இந்த துறை மற்றும் தொடர்புபட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக பெலிஅத்த மற்றும் மீகஹஜயபுர ஆகிய பிரதேசங்களில் 2000 மெற்றிக் தொன் வலுவைக் கொண்ட நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட 2 களஞ்சியசாலைகளை நிர்மாணிப்பதற்கும் நாடு முழுவதிலுமுள்ள 39 களஞ்சிய சாலைகளை சீர்செய்வதற்கும் விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம ;மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்தஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |