Home » » கைதான காத்தான்குடி நபரை தப்பிக்கவிட்டனர் பொலிஸார்!

கைதான காத்தான்குடி நபரை தப்பிக்கவிட்டனர் பொலிஸார்!



சிறுமி ஒரு­வ­ரைக் கடத்த முற்­பட்ட குற்­றச்­சாட்­டில், காத்­தான்­கு­டி­யைச் சொந்த இட­மா­கக் கொண்ட இளை­ஞனை மடக்­கிப் பிடித்து முறை­யான கவ­னிப்­பின் பின்­னர் பொலி­ஸா­ரி­டம் மக்­கள் ஒப்­ப­டைத்­த­னர். அவர் மருத்­து­வ­ம­னை­யில் பொலிஸ் பாது­காப்­பி­லி­ருந்­த­ போது தப்­பிச் சென்­றுள்­ளார். பொலி­ஸார் வேண்­டு­மென்றே அவ­ரைத் தப்­பிக்கவிட்­ட­னர் என்று நாவாந்­துறை மக்­கள் குற்­றம் சுமத்­தி­னர்.
‘கடந்த 23ஆம் திகதி எமது பகு­தி­யில் 12 வய­துச் சிறு­மியை உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞன் கடத்­திச் செல்ல முற்­பட்­டான். இருப்­பி­னும் சிறுமி பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டாள். கடத்த முற்­பட்ட இளை­ஞன் தப்­பிச் சென்­று­விட்­டான். உந்­து­ருளி இல­கத்­தைக் குறித்து வைத்­துக் கொண்­டோம். இன்­றும் (நேற்று) அதே உந்­து­ரு­ளி­யில் இளை­ஞன் ஒரு­வன் உலா­வு­வதை அவ­தா­னித்­தோம். சந்­தைப் பகு­தி­யில் அவரை மடக்­கிப் பிடித்­தோம்’ என்று நாவாந்­து­றைப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.
இளை­ஞனை மடக்­கிய மக்­கள் அவரை கம்­பத்­தில் கட்டி வைத்து முறை­யா­கக் கவ­னித்­த­னர். பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­போ­தும் 2 மணி­நே­ரம் தாம­த­மா­கவே அவர்­கள் அங்கு வந்­த­னர்.
பொலி­ஸா­ரி­டம் இளை­ஞன் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான். இதன்­போது, தான் காத்­தான்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் சமை­யல் வேலைக்­கா­கவே யாழ்ப்­பா­ணம் வந்­தேன் என்­றும் இளை­ஞன் தெரி­வித்­துள்­ளான்.
யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் 24ஆம் விடு­தி­யில் இளை­ஞனை பொலி­ஸார் சிகிச்­சைக்­கா­கச் சேர்ப்­பித்­த­னர். அங்­கி­ருந்து மற்­றொரு விடு­திக்கு நேற்று மாலை 3.30 மணி­ய­ள­வில் இட­மாற்­றும்­போது இளை­ஞன் தப்­பித்­துச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இளை­ஞ­னுக்கு மருத்­து­வ­ம­னை­யில் கைவி­லங்கு இன்­றியே சிகிச்சை வழங்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |