Advertisement

Responsive Advertisement

42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 42 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த போதே கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று இரவு 7 மணியளவில் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments