யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 42 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த போதே கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றினர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று இரவு 7 மணியளவில் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
|
0 Comments