Home » » வெள்ளத்தில் மூழ்கிய வடக்கு; மஹிந்தவின் புதல்வர் வெளியிட்டுள்ள கருத்து!

வெள்ளத்தில் மூழ்கிய வடக்கு; மஹிந்தவின் புதல்வர் வெளியிட்டுள்ள கருத்து!

வடக்கில் பெய்துவருகின்ற கடுமையான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி அப்பகுதியின் மக்கள் பாரிய பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
குறித்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கும், அனர்த்தத்தினால் எத்தனை குடும்பஙகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் நிவாரண உதவிகள் தொடர்பிலும் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் விசேட கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், தனது டுவிட்டர் கணக்கின் மூலம் பதிவொன்றினை இட்டுள்ள பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பெறும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றார்.
குறித்த பதவில் அவர் “வடக்கில் கடுமையான மழை காரணமாக பல குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இராணுவம் மக்களுக்கு உதவுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கில் உள்ள மக்களுக்கு உதவுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீது தமது அதிகாரத்தை பயன்படுத்தும் என நினைக்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |