நாடாளுமன்றில் ஏற்பட்ட அசாதாரண நிலைக்குப் பின் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் தலைமையில் தற்போது இடம்பெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றை ஒத்திவைக்காமலேயே தனது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார்.
இதையடுத்து தற்போது இடம்பெறும் கூட்டத்தில் நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த கூட்டத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments: