மன்னாரில் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து எலும்புக் கூடுகளை அகழ்வு செய்யும் பணி இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று 77 ஆவது தடவையாக அகழ்வு பணி இடம்பெற்றது. தற்போது வரை 141 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 135 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலம் ஆரம்பித்துள்ளமையினால் அகழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments