அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதமை மற்றும் காலதாமதங்கள் குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாக, சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
|
யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்போதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் பாரிய குற்றங்களின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுதலை செய்வது கடினமானது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி.யிடம் இருந்த அரசியல் கைதிகளின் விபரங்களையும் அவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments