Home » » உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் குறித்து மூன்று நாட்களுக்குள் முடிவு! - சட்டமா அதிபர்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் குறித்து மூன்று நாட்களுக்குள் முடிவு! - சட்டமா அதிபர்

அனு­ரா­த­புர சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதமிருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தமை மற்றும் காலதாம­தங்கள் குறித்து உட­ன­டி­யாக கவனம் செலுத்துவதாக, சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் விவ­காரம் குறித்து இன்னும் இரண்டு அல்­லது மூன்று தினங்­க­ளுக்குள் நட­வ­டிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்த கால­கட்­டத்தில் கைது­செய்­யப்­பட்ட அர­சியல் கைதிகள் பலர் பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் இப்­போதும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் பாரிய குற்­றங்­களின் பெயரில் கைது­செய்­யப்­பட்­ட­வர்கள். அவர்­களை விடு­தலை செய்­வது கடி­ன­மா­னது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இச் சந்திப்பின்போது சுமந்­திரன் எம்.பி.யிடம் இருந்த அர­சியல் கைதி­களின் விப­ரங்­களையும் அவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |