Home » » வெல்லாவெளியில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

வெல்லாவெளியில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

Add caption
மட்டக்களப்பு- வெல்லாவெளி, சின்னவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றுக்காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தம்பிராசா குணராசா (வயது 47) என்றும், மாட்டு பட்டிக்குச் சென்ற வேளையிலே காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகியதாகவும் தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |