வெல்லாவெளியில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
|
Add caption |
மட்டக்களப்பு- வெல்லாவெளி, சின்னவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றுக்காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தம்பிராசா குணராசா (வயது 47) என்றும், மாட்டு பட்டிக்குச் சென்ற வேளையிலே காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகியதாகவும் தெரிய வருகிறது.
|
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
|
0 comments: