Home » » கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்


கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பிரதி காவற்துறை மா அதிபருக்கு ஊடகவியலாளர் தகவலை வழங்கியுள்ளார்.இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்டவர் எனவும், ஜந்து வயதில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இவர் இறுதியாக நேற்று முன்தினம் இரவு மாலை 7.15 மணிக்கு ஆடைத் தொழிற்சாலையில் தனது கடமையினை நிறைவு செய்திருக்கிறார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |