மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை சங்கானை பிரதேச செயலகம் நோக்கி பேரணியை முன்னெடுத்தனர்.
சுழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.சுழிபுரரத்திலிருந்து சங்கானை பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று பிரதேச செயலரிடம் மனு ஒன்றையும் மக்கள் கையளித்தனர்.(15)
0 Comments