Home » » சபரகமுவவில் விரைவில் 900 பேருக்கு ஆசிரியர் நியமனம் : ஓய்வு பெற்றவர்களும் இணைக்கப்படலாம்

சபரகமுவவில் விரைவில் 900 பேருக்கு ஆசிரியர் நியமனம் : ஓய்வு பெற்றவர்களும் இணைக்கப்படலாம்


சபரகமுவ மாகாண பாடசாலைகளுக்காக புதிதாக 900 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய கல்வி வலய அதிபர்களின் கூட்டத்தில கலந்து கொண்ட சப்ரகமுவ ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் மாகாணத்தில் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற் கொண்டு டிப்னோமா மற்றும் பட்டதாரிகள் 900 பேர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் மொழி மூலம் தகைமையுடைய ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சப்ரகமுவ ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.கூறினார். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |