பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.
|
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கலாநிதி தீபிகா உடகம, “இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச தரப்படுத்தலில் ஏ தரத்தை பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இது அரசியல் யாப்பின் மீதான 19வது திருத்தத்தை நிறைவேற்றி அதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துமாறு கோரிய இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை மக்களுக்கு நியாயமான பாதுகாப்பை வழங்க முடிந்தது.
இந்த ஆணைக்குழுவிற்கு வருடந்தோறும் 9 ஆயிரத்திற்கும்இ 10 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இவற்றை விசாரிப்பதற்கு போதிய ஆளணி வளம் இருக்கவில்லை. ஆனால் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்! - திபிகா உடகம
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம்! - திபிகா உடகம
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: