Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - உச்சிச்சையில் தீ மிதி திருவிழாவில் தீப்பந்தம் விழுந்து 20 பேர் காயம்!

மட்டக்களப்பு - உச்சிச்சையில், நேற்று இரவு 11 மணியவில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீப்பந்தம் சுழற்றியபோது அதில் இருந்து நெருப்பு பக்தர்கள் மீது வீழ்ந்ததில் 20 பேர் படுகாயமடைந்த நிலையில், ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
உன்னிச்சை 7 ம் கட்டை மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்றது . நேற்று இரவு 11 மணியளவில் அம்மன் வீதி உலா வரும்போது அதற்கு முன்னால் பக்தர் ஒருவர் சுழற்றி கொண்டிருந்த தீப்பந்தில் இருந்து திடீரென நெருப்பு பக்தர்கள் மேல் வீழ்ந்து தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பக்தர்கள் சிதறி பயத்தில் ஓடியதுடன் தீப்பற்றியவர்களின் உடைகளை கழற்றி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததுள்ளனர்.
படுகாயமடைந்த சிறுவர்கள் உட்பட 20 பேர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் படுகாயமடைந்த 2 பேரை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
   

Post a Comment

0 Comments