இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் தங்கள் இழப்புகளிற்கான பதில்களை கோரி நிற்கும் அதேவேளை யுத்தத்தின் காயங்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களில் நான் பாதிக்கப்பட்ட கனடா தமிழர்கள் பலரை சந்தித்துள்ளேன்,அவர்களின் கதைகள் இலங்கை நிரந்தர சமாதானம் உண்மையான நல்லிணக்கத்தை அடையவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தியுள்ளனஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் சிக்கி தப்பியவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
0 Comments